gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

புதன்கிழமை, 20 February 2013 00:00

பசுமை மொழி வித்து!

ஓம்சிவாயநமக!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

$$$$$

பசுமை மொழி வித்து!


பசுமை ஓர் இதமான எண்ணம். உணர்வு. அதை நினைத்தால் குளிர்ச்சியாய் இருக்கும். மனதில் அமைதி கிட்டும். ஆனந்தத்துடன் ஓர் பரவச நிலை ஏற்படும். அதன் வனப்பு குளுமையைத் தரும். உள்ளத்திற்கு உணர்வுகளுக்கு இனம்புரியாத ஆனந்த மகிழ்வைத் தரும். சந்தோஷத்தில் மூழ்கடிக்கும், பல புதிய எண்ணங்களை உருவாக்கும்.

பசுமை இனிமையான சூழலை உருவாக்கி அந்த இடத்தை மலர வைக்கும் தன்மையுடையது. அது உள்ளத்திற்கு புத்துணர்வு தந்து அதன் மூலமாக உடல் புதிய தெம்புடன் செயல்பட இயங்க வைக்க முடியும்.

இதுமட்டுமல்லாமல் பசுமை நிழல் தரும். நிழல் என்றால் ஒளியின் பரப்பால் பொருளின் உருவம் ஒளிக்கு எதிர் திசையில் உருவாகும். அதன் வடிவம் பல கோட்பாடுகளுக்குட்பட்டது. மரத்தின் நிழல் ஜீவராசிகள் அனைத்திற்கும் பயன் படும் வகையில் அமைந்துள்ளது. அதே நிழல் மனிதனுக்கும் உண்டு. ஆனால் அது அவனுக்கும் பயன் படாது. மற்றவர்களுக்கும் பயன்தராது. எனவேதான் மனிதன் எல்லோருக்கும் பயன்படும் நிழல் தரும் பசுமை கொள்ளும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகின்றது.

வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்பது அனுபவித்த ஆன்றோரின் வாக்கு. அந்த நிழலின் சுகத்தை நமக்கும் மற்றைய ஜீவராசிகளுக்கும் அளிப்பது மரங்களே.

மரங்கள் இப்பூமியில் தோன்றி நிழல் மட்டும் தருவதில்லை. பலவகைகளில் உலக ஜீவிதத்திற்கு உற்ற துணையாக இருக்கின்றது. சில மர வித்துக்களிலிருந்து எண்ணெய் கிடைக்கப் பெற்று மனித குலம் பயன்படுத்துகின்றது.

நெருப்பை உருவாக்க, எரியும் நெருப்பை அதிகரிக்க, உயிரற்ற உடல்களை தகனம் செய்து சாம்பலாக மாற்றி மண்ணுடன் மண்ணாக்க நம்மிடைய இயற்கை அளித்துள்ள பல்வேறுவகையான மரங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றது.

மனிதன் ரப்பர் கண்டு அதன் உபயோகங்களை அறிந்து கொண்டு அதைத் தயாரிக்க மூலப் பொருளினை மரத்திலிருந்துதான் பெறுகின்றான். மரங்களிலிருந்து ஒட்டும் பிசின், பசை தயாரித்து உபயோக்கின்றோம்.

நாம் எழுதுவதற்கு உபயோகமாகும் காகிதங்களை மரத்திலிருந்துதான் நாம் பெறுகின்றோம். எழுதும் பென்சில் தயாரிக்கின்ரோம். நாம் குடியிருப்புக்கு தேவையான சன்னல், கதவு, விட்டம், கூரை ஆகியவற்றை மரங்கள் தாம் வழங்குகின்றது. நம் வீட்டிற்குள் மேஜை, நாற்காலி, கட்டில், பீரோ, சோபா போன்றவைகளும் அழகு சாதனங்கள் வைக்கவும் மரங்களைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

அலங்காரப் பொருள்கள், மரச்சிலைகள், தெய்வ சிலைகளை மரங்களின் உதவியால் தயாரிக்கின்றோம். வாகனங்களுக்கு கூடுகட்ட பயன்படுத்துகின்றோம்.

இவைகளுக்கு மேலாக பல மரங்களும் செடி கொடிகளும் நமக்கு உண்ணுவதற்கு என பல்வேறு பழ வகைகளைத் தருகின்றன.

ஆடு, மாடு போன்ற பல நான்கு கால் ஜீவராசிகளின் உணவிற்கு பசுந்தழைகளைத் தருகின்றன.

மேட்டுப்பகுதியிலிருந்து மழைநீர் வேகமாகப் பாயும்போது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்தும் வெள்ள அபாயத்திலிருந்து ஜீவராசிகளுக்கு உதவியாய் இருப்பதும் மரங்களே.

மரம் செடி கொடிகளின் பூக்கள் கண்ணிற்கும் மனத்திற்கும் குளுமை அளித்து பரவசத்தை ஏற்படுத்தி மனிதனை தன் துன்ப துயரங்களிலிருந்து சில விநாடிகள் விடுவிக்கின்றன.

சூரிய ஒளியால் பூமி வெப்பம் அடைவதை தடுக்கின்றது.

பிரபஞ்சத்தில் வரும் அசுத்த காற்றை தான் ஏற்று சுத்த பிராணவாயுவை வெளியிட்டு வாழ்வின் ஜீவாதாரத்திற்கு துணை புரிகின்றது.

மேலும் மேகங்களைக் கவர்ந்து மழை தருவித்து அப்பகுதிக்கு நீர் கிடைக்க துணைபுரிகின்றது. குளிர்ந்த இதமான சூழலை ஏற்படுத்துகின்றது.

மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கின்றது.

உலக ஜீவராசிகளுக்கு அதுவும் மனித குலத்திற்கு இத்தனை பல்வேறு நலங்கள் நாம் கேட்காமல் அளிக்கும் மரங்களை நாம் உற்ற நண்பனாக கொண்டு அதைப் பேணிக் காக்க வேண்டும். ஒருவன்

வாழ்நாளில் ஓர் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும். மரங்களை வெட்டக்கூடாது. மரங்களை வெட்ட அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டாய நிலை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் மரங்கள் இல்லா நிலை ஏற்படும். நாம் அனுபவித்து வந்த எல்லாச் சுகங்களும் அழிந்து படும். அந்த நிலை வருமுன் காக்க அனைவரும் புரிந்துணர்வு கொண்டு ஒவ்வொருவரும்

குறைந்தது ஒரு மரம் வளர செய்யுங்கள். மரங்களை வெட்டாதீர்.

பசுமைதனை உணர்வீர். பசுமை என்ற இதமான உணர்வை பரப்புவீர். நம்மைச் சுற்றி பசுமை மலர முயற்சியுங்கள். அந்த பசுமைமொழி நம் பிற்கால சந்ததியினருக்கு, எதிர்கால மனித குலத்திற்கு ஓர் ஒளியாக உதவும். மனிதநேயம் கொண்டு அந்த உதவியைச் செய்ய முனைவீர் என அன்புடன் அழைக்கும்.

பசுமைமொழி வித்து ஒவ்வொரு மனித உள்ளத்திலும் முளைத்து குருத்துவிட ஆவல்--குருஸ்ரீ பகோரா

$$$$$
                                                   

புதன்கிழமை, 20 February 2013 09:30

சக்ர யோகம்

        ஓம்சிவாயநமக!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
******


சக்ரத் தியானம்
நம் உடலில் உள்ள ஆதார சக்கரங்களை முழு மனத்துடன் நினைத்து தியானத்தில் ஈடுபடுதல் சக்ரத்தியானம். அந்தந்த சக்கரத்திற்குரிய இடத்தில் அதனுடைய பெயர், நிறம், வடிவம், உரிய தெய்வம், கலை மற்றும் அதன் நிறம் ஆகியவற்றை நினைத்து தியானத்தில் ஒருமனதுடன் நினைவைச் செலுத்தி ஈடுபடவேண்டும். மனம் ஒருமுகப்பட்டு மந்திரங்களை ஒலித்து செய்தால் மனமும் உடலும் சுத்தமாகும். உடலில் உள்ள சக்கரங்களும், சூன்யங்களும், கலைகளும் அதைப்பற்றிய குறிப்புகளும் கீழ்கண்ட வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஏழு+1 ஆதரங்களை நினைத்தோ, பதினாறு கலகளை நினைத்தோ, ஆறு சூன்யங்களை நினைத்தோ தியானம் செய்யலாம். எல்லப் பொருள்களுக்கும் அதிதேவதைகள் இருப்பதால் கலைகளில் அதை அறிந்து வழிபட்டால் சிக்கல்கள் தீரும். அ – உ – ம் எனும் பிரணவத்தில் அ- தோன்றுவதால் அதற்கு படைப்புக் கடவுளும், உ- வளருவதற்கு துணை செய்வதால் காவல் கடவுளும், ம்- முடித்து வைப்பதால் அழித்தல் கடவுளுக்கும் பிறகு ஒவ்வொரு நிலைக்கும் மும்மூர்த்திக்கும் மேலான கடவுள் பெயர் சொல்லப்பட்டுள்ளது

1. மூலாதாரம்.
2. சுவாதிட்டானம்.
3. மணிப்பூரகம்.
4. அநாதகம்.
5. விசுக்தி.
6. ஆக்ஞை.
7. சகஸ்ராரம்.
8. துவாதசாந்தம்.
9. ஆறு சூன்யங்கள்.

 

1.மூலாதாரம்.

 

இருப்பிடம்

பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடையில்

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

கலை

கோடகலையான குண்டலினிக்கலை

பரப்பு அளவு

மூலாதாரம் முதல் நாபி-தொப்புள் வரை 12 விரல்

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

நான்கு இதழ் தாமரை-வெண்மை

அதிதேவன்

விநாயகர்

2.சுவாதிட்டானம்.

 

இருப்பிடம்

பிறப்புறுப்பிற்குமேல்

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

ஆறு இதழ் தாமரை-பொன்மை

அதிதேவன்

பிரம்மா

3.மணிப்பூரகம்.

 

இருப்பிடம்

தொப்புள்

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

பத்து இதழ் தாமரை-செம்மை

அதிதேவன்

திருமால்

4.அநாதகம்.

 

இருப்பிடம்

நடுமார்பு

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

பன்னிரண்டு இதழ் தாமரை-படிகம்

அதிதேவன்

உருத்திரர்

5.விசுக்தி.

 

இருப்பிடம்

தொண்டை

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

பதினாறு இதழ் தாமரை-பச்சை

அதிதேவன்

மகேசுவரர்

6.ஆக்ஞை.

 

இருப்பிடம்

புருவ நடுவில்

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

இரண்டு இதழ் தாமரை-புகைநிறம்

அதிதேவன்

சதாசிவர்

7.சகஸ்ராரம் (அ) பிரம்மரந்திரம்.

 

இருப்பிடம்

உச்சந்தலை

மந்திர ஓசை

ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

ஆதாரம்/ நிராதரம்

ஆதாரம்

தாமரை இதழ் /நிறம்

ஆயிரம் இதழ் தாமரை-படிகம்

அதிதேவன்

சதாசிவர்

8. துவாதசாந்தம்.

1 முதல் 16 கலைகளைத் தியானம் செய்யும் முறை துவாதசாந்த கலாப் பிராசாத யோகம் அல்லது சோடச கலாப் பிராசாத யோகம் ஆகும். இதற்கு நாபி- தொப்புளிருந்து ஆரம்பிக்க வேண்டும். பிரணவமாகிய ‘ஓம்’ ஓசையின் முதல் பிரிவு 12 கலைகளாகும். பன்னிரண்டாக எண்ணி பாவிக்கப்படும் போது அது சிவசக்தி தொடர்பை பெறும் 10 க்கும் 11 க்கும் இடையே 4 கலைகள் சதுர வடிவில். மொத்தம் 16 கலைகள்.
மந்திர ஓசை - ஓம் (அ + உ + ம் (அ) ஐம் + க்லீம் + ஸௌ)

இருப்பிடம்- புருவ மத்தியிலிருந்து 12 விரல் உயரத்தில் இருப்பது. இது முதல் துவாதசாந்தம் எனப்படும். சக்தி, வியாபினி, சமனை, உன்மனை ஆகிய நான்கும் (1+3+4+4)12 விரல் அளவு கூறியிருந்தாலும் அவைகள் பரந்து ஒன்றியுள்ளதால் இவைகள் இரண்டாம் துவாதசந்தம் எனப்படும்.
பரப்பு- மூலாதாரத்திலிருந்து புருவமத்தி ஆக்ஞாவரை உள்ள ஆறு ஆதாரங்களில் சுழுமுனை நாடியின் நீளம் 40 விரல் (12+12+7+4+4+1) + புருவ மத்திக்குமேல் துவாதசாந்தம் 12 விரல் மொத்தம்= 52 விரல்
கலைகள்- அகாரக்கலை, உகாரக்கலை, மகாரக்கலை, விந்துக்கலை, அர்த்தசந்திரக்கலை, நிரோதினிக்கலை, நாதக்கலை, நாதாந்தக்கலை, சக்திக்கலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, உன்மனைக்கலை. சமனைக்கும் வியாபினிக்கும் நடுவில் வியோமரூபினி, அனந்தை, அனாதை, அனாசிருதை நான்கும் சதுர வடிவில்

ஆதாரம்/நிராதாரம்- அகாரக்கலை, உகாரக்கலை, மகாரக்கலை, விந்துக்கலை, அர்த்தசந்திரக்கலை, நிரோதினிக்கலை, நாதக்கலை, நாதாந்தக்கலை. சக்திக்கலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, உன்மனைக்கலை. சமனைக்கும் வியாபினிக்கும் நடுவில் வியோமரூபினி, அனந்தை, அனாதை, அனாசிருதை நான்கும் சதுர வடிவில்

எழுத்து /வடிவம்- அகாரக்கலை-அ, உகாரக்கலை-அ, மகாரக்கலை-ம, விந்துக்கலை-0, அர்த்தசந்திரக்கலை- பிறைவடிவம், நிரோதினிக்கலை- முக்கோணம், நாதக்கலை- நடுவில் ஒரு கலப்பை இருபக்கமும் இரு வட்டம், நாதாந்தக்கலை- வலப்பக்கம் வட்டம் கலப்பையுடன். சக்திக்கலை- இடப்பக்கம் வட்டம் கலப்பையுடன். , வியாபினிக்கலை- வலப்பக்கம் ஒரு வட்டத்துடன் திரிசூலம், சமனைக்கலை- இரு நேர் கோட்டிற்கு இருபுறமும் இரு வட்டம், உன்மனைக்கலை- தனிவட்டம்.

அதிதேவர்கள்- அகாரக்கலை- பிரம்மா, உகாரக்கலை- திருமால், மகாரக்கலை-உருத்திரன், விந்துக்கலை- மகேசுவரன், அர்த்தசந்திரக்கலை- சதாசிவன், நிரோதினிக்கலை- சதாசிவன், நாதக்கலை- சதாசிவன், நாதாந்தக்கலை- சதாசிவன், சக்திக்கலை-சிவன், வியாபினிக்கலை- சிவன், சமனைக்கலை- சிவன், உன்மனைக்கலை- சிவன்.
நிறம்- அகாரக்கலை- எரியும் தழல், உகாரக்கலை- சூரிய சந்திரன் ஒன்றாய் இருப்பது போன்ற, மகாரக்கலை- மின்னல் ஒளி, விந்துக்கலை- விளக்குச் சுடர், அர்த்தசந்திரக்கலை- வாளின் கூரிய பகுதி, நிரோதினிக்கலை- புகை, நாதக்கலை- மாணிக்க ஒளி, நாதாந்தக்கலை- இரண்டு மின்னல்கள் சேர்ந்து, சக்திக்கலை- 100 சூரியன், வியாபினிக்கலை- 1000 சூரியன், சமனைக்கலை- கோடி சூரியன், உன்மனைக்கலை- அளவிலா சூரிய ஒளி
தத்துவம்- அகாரக்கலை- ஆன்மதத்துவம் (நிலமாகிய பூதம் முதல் மூலப்பிரகிருதிவரை), உகாரக்கலை- ஏழு வித்யா தத்துவங்களில் மாயை நீங்கிய ஆறும், மகாரக்கலை- சிவதத்துவம்- ஐந்தில் சுத்த வித்தை, ஈச்வரம் இரண்டில் நிற்கும், விந்துக்கலை- மாயை, அர்த்தசந்திரக்கலை- சதாசிவ, நிரோதினிக்கலை- சதாசிவ, நாதக்கலை- சதாசிவ, நாதாந்தக்கலை- சதாசிவ, சக்திக்கலை- சிவ, வியாபினிக்கலை- சிவ, சமனைக்கலை- சிவ, உன்மனைக்கலை- சிவ.

பதினாறு கலைகள்

கலை-1- மேதைக்கலை- அகாரக்கலை

மாத்திரை அளவு

3- மூன்று

பரப்பு அளவு

நாபி-தொப்புள் முதல் மார்பு நடு-இதயம் வரை 12 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/ வடிவம்

அதிதேவர்கள்

பிரம்மா

நிறம்        

எரியும் தழல்

தத்துவம்    

ஆன்மதத்துவம் (நிலமாகிய பூதம் முதல் மூலப்பிரகிருதிவரை)

கலை-2- அருக்கீசக்கலை- உகாரக்கலை

மாத்திரை அளவு

2- இரண்டு

பரப்பு அளவு

இதயம் முதல் தொண்டைக்குழிவரை 7 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

அதிதேவர்கள்

திருமால்

நிறம்        

சூரிய சந்திரன் ஒன்றாய் இருப்பது போன்ற

தத்துவம்    

ஏழு வித்யா தத்துவங்களில் மாயை நீங்கிய ஆறும்

கலை-3- விடக்கலை- மகாரக்கலை

மாத்திரை அளவு

1- ஒன்று

பரப்பு அளவு

தொண்டை முதல் நாக்கின் அடிவரை 4 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

அதிதேவர்கள்

உருத்திரன்

நிறம்        

மின்னல் ஒளி

தத்துவம்    

சிவதத்துவம்- ஐந்தில் சுத்த வித்தை, ஈச்வரம் இரண்டில் நிற்கும்

நாபிக்கு அடுத்துள்ள மேதைக் கலை(அ), அருக்கீசக் கலை(உ), விடக் கலை(ம) ஆகிய மூன்றின் முடிவில் முதல் சூன்யம்

கலை-4- விந்துக்கலை

மாத்திரை அளவு

½ (0.5) அரை

பரப்பு அளவு

நாக்கினடி முதல் புருவ நடுவரை 4 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

0

அதிதேவர்கள்

மகேசுவரன்

நிறம்        

விளக்குச் சுடர்

தத்துவம்    

மாயை

கலை-5- அர்த்தசந்திரன் கலை

மாத்திரை அளவு

1/4 (0.250) கால்

பரப்பு அளவு

புருவநடு முதல் உச்சித்துளைவரை- முதல் 3 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

பிறைசந்திரன்

அதிதேவர்கள்

சதாசிவன்

நிறம்        

வாளின் கூரிய பகுதி

தத்துவம்    

சதாசிவ

கலை-6- நிரோதினிக்கலை

மாத்திரை அளவு

1/8 (0.125) அரைக்கால்

பரப்பு அளவு

புருவநடு முதல் உச்சித்துளைவரை- அடுத்த 3 விரல்

ஆதாரம்/நிராதாரம்

ஆதாரம்

எழுத்து/வடிவம்

முக்கோணம்

அதிதேவர்கள்

சதாசிவன்

நிறம்        

புகை

தத்துவம்    

சதாசிவ

விந்துக்கலை, அர்த்தசந்திரன்கலை, நிரோதினிக்கலை ஆகிய மூன்றின் முடிவில் இரண்டாம் சூன்யம்

கலை-7- நாதக்கலை

மாத்திரை அளவு

1/16 (0.0625) வீசம்-மாகாணி

பரப்பு அளவு

புருவநடு முதல் உச்சித்துளைவரை- அடுத்த 3 விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

ஏற்கலப்பை இருபக்கமும் வட்டம்

அதிதேவர்கள்

சதாசிவன்

நிறம்        

மாணிக்க ஒளி

தத்துவம்    

சதாசிவ

கலை-8- நாதாந்தக்கலை

மாத்திரை அளவு

1/32 (0.03125) அரைமா- அரைக்காணி

பரப்பு அளவு 

புருவநடு முதல் உச்சித்துளைவரை- அடுத்த 3 விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

ஏற்கலப்பை வலப்பக்கம் ஒருவட்டம்

அதிதேவர்கள்

சதாசிவன்

நிறம்        

இரண்டு மின்னல்கள் சேர்ந்து

தத்துவம்    

சதாசிவ

கலை-9- சக்திக்கலை

மாத்திரை அளவு

1/64 (0.0156125) காணியே- முந்திரிகை

பரப்பு அளவு

உச்சித்துளை 1விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

ஏற்கலப்பை இடப்பக்கம் ஒருவட்டம்

அதிதேவர்கள்

சிவன்

நிறம்        

100 சூரியன்

தத்துவம்    

சிவ

சக்திக்கலைக்கு அடுத்து மூன்றாம் சூன்யம்

கலை-10- வியாபினிக்கலை

மாத்திரை அளவு

1/128 (0.007806125) அரைக்காணியே- கீழரை

பரப்பு அளவு

சக்திகலை முதல் 3விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

சூலத்துடன் ஒரு வட்டம்

அதிதேவர்கள்

சிவன்

நிறம்        

1000 சூரியன்

தத்துவம்    

சிவ

வியாபினிக்கலைக்கு அடுத்து நான்காம் சூன்யம்

கலை-11- சமனைக்கலை

மாத்திரை அளவு

1/256 (0.00395306125) முந்திரிகையே-கீழ்க்கால்

பரப்பு அளவு

வியாபினிக்கலை முதல் 4 விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

இரு நேர் கோட்டிற்கு இருபுறமும் இரு வட்டம்

அதிதேவர்கள்

சிவன்

நிறம்        

கோடி சூரியன்

தத்துவம்    

சிவ

சமனைக்கலைக்கு அடுத்து ஐந்தாம் சூன்யம்

கலை-12- உன்மனைக்கலை

மாத்திரை அளவு

மனத்தளவு

பரப்பு அளவு

சமனைக்கலை முதல் 4விரல்

ஆதாரம்/நிராதாரம்

நிராதாரம்

எழுத்து/வடிவம்

தனிவட்டம்

அதிதேவர்கள்

சிவன்

நிறம்        

அளவிலா சூரிய ஒளி

தத்துவம்    

சிவ

உன்மனைக்கலைக்கு அடுத்து ஆறாம் சூன்யம்

கலை-13 - வியோமரூபினிக்கலை
கலை-14 - அனந்தைக்கலை
கலை-15 - அனாதைக்கலை
கலை-16 - அனாசிருதைக்கலை

வியாபினிக் கலைக்கும் சமனக் கலைக்கும் இடையே மிகவும் சூக்குமமாய் நான்கு கலைகள் 1.வியோம ரூபிணி, 2.அனந்தை, 3.அனாதை, 4. அனாசிருதை உள்ளன. இவைகளுக்கு விந்துவாகிய வட்டப்புள்ளியே வடிவமாகும். ஞான ஆகாயம், ஞானக்கடல், ஞானக்கண்ணாடி, கோடி சந்திரர் ஒளி என இந்தக் கலைகளைக் கருதி தியானம் செய்க. பதிமூன்று முதல் பதினாறாகிய கலைகளுக்கு வியாபினியின் மாத்திரையில் பாதிப் பாதியாக கொள்க.

சமனை மற்றும் உன்மனை வரை நிராதாரமாகச் சொல்லப்பட்ட கலைகளைக் கடந்து தியானம் செய்தால் மாயையான உலகப் பாசங்கள் விலகும். கடவுளை எளிதில் அடையலாம்.

பத்துக்கும் பதினொன்றுக்கும் நடுவில் இருக்கும் நான்கு கலைகளும் சமமாக சதுர அளவில் பிரிவதில்லை. வியோமரூபிணி- கீழ், அனந்தை- இடப்பக்கம், அனாதை வலப்பக்கம், அனாசிருதை –மேல் என வைத்து தியானிக்கவும்

9. ஆறு சூன்யங்கள்.

சூன்யங்கள் என்பது இடைவெளியாகும். காற்றின் பரப்பில், நீரின் பரப்பில் சுழல் ஏற்படும் இவை வெற்றிடங்களே. வேகத்தின் வலிமையால் இந்த வெற்றிடங்கள் சூன்யங்கள் உருவாகின்றன. இந்த சூன்யங்களில் சிக்காமால் திகைக்காமல் மேலே தாண்டிப் போவதற்காகவே இந்த சூன்யங்களை நினைத்து தியானம் செய்வது சூன்ய தியானமாகும்.

சூன்யங்கள்இருப்பிடம்
1. நாபிக்கு அடுத்துள்ள மேதைக் கலை(அ), அருக்கீசக் கலை(உ), விடக் கலை(ம) ஆகிய மூன்றின் முடிவில் முதல் சூன்யம்;
2. விந்துக்கலை, அர்த்தசந்திரன்கலை, நிரோதினிக்கலை ஆகிய மூன்றின் முடிவில் இரண்டாம் சூன்யம்:

3. நாதக் கலை, நாதாந்தக் கலை, சக்திக் கலை ஆகிய மூன்றின் முடிவில் மூன்றாம்சூன்யம்;
4. வியாபினி கலைக்கு மேல் நான்காம் சூன்யம்;
5. சமனைக் கலைக்கு மேல் ஐந்தாம் சூன்யம்;
6. உன்மனைக் கலைக்கு மேல் ஆறாம் சூன்யம்.

இந்த ஆறு சூன்யத்திற்குமேல் பரம் பொருள்
ஆதாரம்/ நிராதரம் -முதல் 2 சூன்யமும் ஆதாரம். மற்ற 4 சூன்யமும் நிராதாரம். நிராதாரத்தில் இருக்கும் சூன்யத்தைக் கடப்பதை முப்பாழ் என்பர்.

******

புதன்கிழமை, 20 February 2013 09:29

ஆரோக்கிய முத்திரைகள்

ஒம் நமசிவய நமக!
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

$$$$$     

                                                

முத்திரைகள்!


முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்றறிந்தனர். எங்கு யாரால் எதற்காகப் பயன்படுத்தினாலும் அந்த முத்திரை அவர்களின் நரம்பு மண்டலத்தில் சில செயல்களைச் செய்து அவர்களை அறியாமல் அவர் நல்வாழ்விற்கு உற்ற துணையாகின்றது. எந்த முத்திரையானலும் பயின்று பயன் படுத்துவதால் உடலுக்கு எந்த கேடும் விளையாது. முத்திரைகளினால் நன்மையைத் தவிர வேறொன்றுமில்லை. உடலில் வியாதிகள் தோன்றாமலிருக்க உதவும். இருக்கும் வியாதிகள் விரைவில் குணமடைய உதவிகரமாக இருக்கும்.கடுமையான தவம், உடல் வருத்தும் பயிற்சிகள் மற்ரும் கசப்பான மருந்துகள் என்ரு எதுவும் இல்லாமல் மனித ஜீவ உயிர்கள் ஆரோக்கிய ஆனந்தமாக வாழ முதல் சித்தன் சிவன் சித்தர்கள் மூலம் நமக்குத் தந்ததை முடிந்த வரையில் பயிற்சி செய்து பலன் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ ஆசி வழங்கும் –குருஸ்ரீ பகோரா

முத்திரைகள்- எல்லோரும் செய்து பழகலாம். வேறு சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்களும் செய்யலாம். எந்த சிகிச்சை முறைக்கும் எதிரானது அல்ல. உடலில் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சக்திகள் சேரவேண்டிய இடத்திற்கு முறையாக சேர உதவுகிறது. யோகப் பயிற்சியில் சொல்லியது போல உள்ளே இழுக்கும் பூரகம் மூச்சை விட, வெளியே விடும் ரேசகம் மூச்சு இரு மடங்கு இருந்தால் அது ஆரோக்யம் ஆகும். எந்த அமர்ந்த நிலையிலிருந்தும் உங்கள் வசதியைப் பொருத்து செய்யலாம். கழுத்து, தலை, முதுகுத்தண்டு ஆகியவை நேராக இருக்கவும். முத்திரை செய்யும் கை எந்த உதவியையும் உறுதுணையையும் பெற்றிருக்கக்கூடாது.

உங்கள் நலனுக்காக கீழே கண்டுள்ள 32 முத்திரைகளை அவற்றின் அருகில் உள்ள குறிப்பினைப் பயன் படுத்தி சரியான முறையில் கவனமாக செய்து பழகவும். சந்தேகங்களுக்கு குருஸ்ரீ பகோராயை மின்னஞ்சலில் / தொலைபேசியில் / அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

அபானவாயு / அனுசாசன் / உஸஸ் / கணேச / கருட / குபேர / சக்தி / சங்கு / சுரபி / சுவாசகோச-2 / சூர்ய / சூன்ய- ஆகாய / சோபன / ஞான-சின் / சமான-துடிப்பு-3 / நாக / பங்கஜ / பிரம்மார / பிராண / பிருத்வி / மகாசிரசு / மாதங்கி / மிருகி – மான் / முதுகுவலி / முஷ்டி / மூட்டுவலி / ருத்ர / லிங்க / வருண – பூதி / வாயு / வீட்ராக் / ஹாக்கினி

$$$$$                                                                                       

 

 அபானவாயு முத்திரை--இருதய முத்திரை-மிருத சஞ்சீவினி முத்திரை
1abanavayumudra

பலன்-இதயம் நன்றாக சீராக இயங்க வைக்கும். மாரடைப்பு ஏற்படாது.

செய்முறை-சுண்டு விரலை நேராக நீட்டி, நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் கட்டைவிரல் நுனியைத் தொடுமாறு செய்யவும். ஆட்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடிப்பாகத்தை தொடுமாறு செய்யவும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்  

 

 அனுசாசன் முத்திரை
2anusasanmudra

பலன்-கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும்.

செய்முறை- ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
உஸஸ் முத்திரை
4usasmudra

பலன்-உரிய நேரத்தில் எழ, விழிப்புணர்வு அதிகரிக்கும்.

செய்முறை-இரு கை விரல்களையும் கோர்த்தவாறு வைக்கவும். ஆண்கள் வலதுகை கட்டை விரலை இடதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும். பெண்கள் இடதுகை கட்டை விரலை வலதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும்.

தினமும்- காலை- எழும்போது, இரவு உறங்கும் போது 3/5 நிமிடம் செய்யவும்

blank  

கணேச முத்திரை

5ganesamudra

பலன்-இருதயம் பலம் பெறும். மன இருக்கம் தளர்ந்து தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

செய்முறை-இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 

   
கருட முத்திரை
6garudamudra 

பலன்-உடல் சோர்வு மறைந்து, கண்பார்வை தீர்க்க மாகும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

செய்முறை-கிராஸ் வடிவில் இடதுகைமேல் வலதுகை இருக்குமாறும் இரு கைகளையும் பாதங்கள் தெரியுமாறும் அவை நம் முகம் பார்த்த வண்ணம் இருக்குமாறும் வைக்கவும். இருகை கட்டை விரல்களை கொக்கிபோல் வளைத்து மாட்டிக் கொள்ளவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாமல் நீட்டி இருக்க வேண்டும்

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
குபேர முத்திரை 
 7kuberamudra

பலன்-சைனஸ் கோளாறுகள் நீங்கும். நினைவாற்றல் கூடும்.பொருளாதார வசதிகளை மேம்படுத்தும் என்பதால் குபேர முத்திரை.

செய்முறை-மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடித்து அதன் நுனி உள்ளங்கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் ஆகியமூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு செய்யவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சக்தி முத்திரை
8sakthimudra

பலன்-உறக்கம் விரைவில் வரும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

செய்முறை-தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கை கட்டை விரல்களையும் உள்ளங்கையில் மடித்து வைத்து ஆள்காட்டி விரல், நடு விரல்களால் மூடியபடி கட்டை விரலில் லேசன அழுத்தம் கொடுக்கவும். இடது கைவிரல்கள் வலது கை விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இடது கை சுண்டு விரல், மோதிர விரல் இரண்டையும் நேராக நீட்டி விரல்களின் நுனிகள் வலது கையின் விரல் நுனிகளைத் தொடுமாறு செய்யவும். இந்நிலையில் கைகளை அப்படியே அடிவயிற்றின் அருகே வைத்து மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடவும்.

இரவு படுக்கையில் 3/5 நிமிடம் செய்யவும்

   
சங்கு முத்திரை
9sangumudra

பலன்-திக்குவாய் குணமாகும். சரளமான தங்குதடையற்ற பேச்சுவளம் கூடும். தொண்டை பாதிப்புகள், தைராய்டு பிரச்சனைகள். ஜீரணக் கோளாருகள் நீங்கும்

செய்முறை-இடது கை கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்துவலது கைவிரல்களால் இறுக பிடிக்கவும். மற்ற விரல்களை வலதுகை விரல்மேல் வைக்கவும். அந்த விரல்களின் நுனி வலதுகை கட்டைவிரலைத் தொட்டவாறு இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சுரபி முத்திரை
10surabimudra

பலன்-வாதநோய் குணமாகும்.

செய்முறை-இடதுகை சுண்டு விரல் வலதுகை மோதிர விரலைத் தொடுமாறும், இடதுகை மோதிர விரல் வலதுகை சுண்டு விரலைத் தொடுமாறும், இடதுகை நடுவிரல் வலதுகை ஆள்காட்டி விரலைத் தொடுமாறும், இடது ஆள்காட்டி விரல் வலது கை நடுவிரலைத் தொடுமாறும், இரு கட்டை விரல்களும் நேராக நிமிர்ந்தும் இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சுவாசகோச முத்திரை 
3asthmamudra

பலன்-ஆஸ்துமா குணமாகும்.

முதல் நிலை-செய்முறை-இருகை பாதங்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நெஞ்சுக்குமுன் வைத்து இருகை நடு விரல்களை உட்பக்கமாக மடித்து அதன் நகக்கண்கள் ஒன்றை ஒன்று தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

11suvasakosamudra 

இரண்டாம் நிலை-செய்முறை- இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சூர்ய முத்திரை
12suryamudra

பலன்-தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும்.

செய்முறை-இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சூன்ய-ஆகாய முத்திரை 
13soonya aagayamudra

பலன்-காது நோய்கள் குணமடையும். காது குறைபாடுகள் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டும்எழும்புகள் வலுவடையும்.

செய்முறை-இடது கை கட்டைவிரல் இடதுகை நடுவிரல் இரண்டின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டவாறு வைத்து மற்ற விரல்கள் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சோபன முத்திரை
14shobnamudra

பலன்-எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.

செய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை கட்டை விரல் மேல் வலதுகை கட்டை விரல் இருக்குமாறு செய்யவும். ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
ஞான-சின் முத்திரை
15gnana sinmudra

பலன்-தியானத்திற்கு ஏற்றது. சிந்தனை தெளிவு அடையும். நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்படும். இரத்த அழுத்தம் சீர்படும். மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூலையின் செல்கள் புத்துணர்ச்சி பெறும். மூளையின் செயல் திறன் ஞாபக சக்தி அதிகரிக்கும். மனம் எளிதில் ஒரு நிலைப்படும்,தலைவலி தூக்கமின்மை, கவலை, கோபம், ஆகியவை நீங்கும்.

செய்முறை-இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நுனியைத் தொட்டவாறு லேசான அழுத்தம் தரவேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
சமான-துடிப்பு முத்திரை
16thudippu1-2 mudra

பலன்-சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

முதல்நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

16.1thudippu1-2-3 mudra இரண்டாம் நிலைசெய்முறை-ஆள்காட்டி விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பின் மோதிர விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.
16.1thudippu1-2-3 mudra மூன்றாம் நிலைசெய்முறை-ஐந்து விரல்களின் நுனிகளும் ஒன்றாக சேர்ந்திருக்குமாறு வைக்கவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

 

தினமும் காலை, மாலை மூன்று நிலை களையும் 3/5 நிமிடம் செய்யவும்.

   
நாக முத்திரை
17naagamudra

பலன்-சிந்தனை தெளிவு அடையும். பிரச்சனைகள், சிக்கல்கள் தீர்வு காணும்.

செய்முறை-இடது உள்ளங்கை கீழ் வலது உள்ளங்கை பாதம் பார்த்தவண்ணம் வைத்து வலது கட்டை விரலால் இடது உள்ளங்கையை லேசாக அழுத்தவும். இடது கட்டை விரல் வலது கட்டை விரல் மீது இருக்க வேண்டும். இடதுகையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்

   
பங்கஜ முத்திரை
18pangajamudra

பலன்-காய்ச்சல் குணமாகும். உடல் சூடு தணியும்..

செய்முறை-இரு கைகளின் பாதங்களை ஒன்று சேர்த்து குவித்து கட்டை மற்றும் சுண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொடுமாறும் மற்ற விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.

   
பிரம்மார முத்திரை 
19brammarahmudra

பலன்-அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும்.

செய்முறை-இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.

   
பிராண முத்திரை 
20piraanamudra

பலன்- கண் பார்வை கூர்மையாகும். மூளை செயல் திறன் அதிகரிக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  நரம்புத் தளர்ச்சியை போக்கும் கண் நோய்கள்  நீங்கும். அபான முத்திரையுடன் சேர்ந்து செய்தால் நீரழிவு நோய் குணமாகும்

செய்முறை-இடதுகை மோதிர விரல், சுண்டு விரல் நுனிகளால் கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற இரண்டு விரல்களும் நேராக இணைந்தபடி நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
பிருத்வி முத்திரை
21piruthvimudra

பலன்-வயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும்.

செய்முறை-இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
மகாசிரசு முத்திரை
22mahasirasumudra

பலன்-தலைவலி, தலை பாரம் குறையும். கண்களில் அயர்ச்சி குறையும்.

செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்து இடதுகை மோதிர விரலை மடித்து அதன் நுனி உள்ளங்கையை நடுவில் தொடுமாறு இருக்கவும் சுண்டு விரல் நேராக நீட்டி இருக்கவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 
   
மாதங்கி முத்திரை 
23madangimudra

பலன்-சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும்.

செய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல்மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும். இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 
   
மிருகி-மான் முத்திரை
24mirukimudra

பலன்-பற்கள் உறுதியாகி பல்வலி குறையும்.

செய்முறை-இடதுகை நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இடதுகை கட்டை விரலால் இரண்டு விரல்களின் நுனியிலிருந்து முதல் ரேகை- கோட்டை லேசான அழுத்தம் கொடுத்துத் தொடவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
முதுகுவலி முத்திரை  
25muduguvalimudra

பலன்-முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும்.

செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும். வலதுகை சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
முஷ்டி முத்திரை  
26mustimudra 

பலன்-பயம் குறையும். தன்னம்பிக்கை அதிகமாகும்.

செய்முறை-இடதுகை விரல்களை மடக்கி உள்ளங் கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டை விரலை மோதிர விரலின் மேல் வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும், கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
மூட்டுவலி முத்திரை    
27mootuvalimudra 

பலன்-மூட்டு வலிகள் குணமாகும்..

செய்முறை-இடதுகை நடுவிரல் நுனியை இடதுகை கட்டை விரலைத் தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். வலதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
ருத்ர முத்திரை   
28rudramudra 

பலன்-வயிற்றின் கோளாறுகள் குணமாகும். குடலிறக்கம், கருப்பை கீழிறங்குதல், மூலநோய் ஆகியவைகள் கட்டுப்பாட்டினுள் வரும்.

செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியை ஒன்று சேர்த்து தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்..

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 
   
லிங்க முத்திரை
29lingamudra  பலன்-தும்மல், சளி, இருமல், மூக்கடைப்பு சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஜலதோஷம் மற்றும் சுவாச பாதிப்புக்களுக்கான எதிர்ப்புச் சக்தியையும் வெப்ப நிலை மாற்றத்தை எதிர்கொளவதற்காண சக்தியையும் அளிக்கும், நுரையீரலுக்கு வலிமை கொடுக்கும். உடலின் வெப்பத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை எரித்துவிடும்.

செய்முறை-இருகைகளையும் கோர்த்து இடதுகைப் பெரு விரல் மீது வலது கைப் பெருவிரல் இருக்குமாறு வைத்து இடதுகைப் பெருவிரலை நேராக நிமிர்த்தி இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
வருண-பூதி முத்திரை 
30varunamudra

பலன்-உடல் சூடு குறையும். தாகம் தணியும். தோல் வறட்சி மறையும். முகப்பருக்கள் வராமல் தடுக்கும்

செய்முறை-இடதுகை கட்டை விரல் நுனியை சுண்டு விரல் நுனியோடு இணைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
வாயு முத்திரை  
31vayumudra 

பலன்-வாயு தொந்தரவு நீங்கும், வயிற்றுக் கோளாறுகள் குறையும்.

செய்முறை-இடதுகை ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலின் அடிப் பகுதியில் வைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

   
வீட்ராக் முத்திரை
32vetrakmudra

பலன்-தியானம் செய்யப் பயன்படும். மன அமைதி ஏற்படும்..

செய்முறை-இடதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு வயிற்றின் அருகில் வைக்கவும். வலதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு இடதுகை பாதத்தின்மேல் வைக்கவும். இரு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 
   
ஹாக்கினி முத்திரை     
33hakginimudra

பலன்-மன அமைதி ஏற்பட்டு நினைவாற்றல் அதிகமாகும்..

செய்முறை-இடதுகை வலதுகை விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் நேராக நீட்டி அவைகளின் நுனிகளை ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

 

   
அஞ்சலி முத்திரை     
 

பலன்-இரு கைவிரல்களும் இணைவதால் வலப்பக்க மூளையும் இடபக்க மூளையும் ஒருங்கிணைந்து செயல்படும்.. சிந்தனை கற்பனா சக்தி, உடலின் செயல் திறன் ஆகியவை பன்மடங்கு அதிகரிக்கும்.

செய்முறை-இறைவனை இரு கரம் குப்பி வணங்குகின்றோமோ அப்படி கூப்பியக் கரங்களே அஞ்சலி முத்திரையாகும்.

தினமும் காலை, மாலை 3/5 நிமிடம் செய்யவும்.

    ***முடிவுற்றது***

புதன்கிழமை, 20 February 2013 09:28

ஆரோக்கிய உணவு!

 ஒம் சிவாயநமக!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

0=0=0=0=0=0

 

ஆரோக்ய உணவு!

 

நாம் இந்த உலகில் பிறந்துவிட்டோம். வாழ்வதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்த வாழ்க்கையை நாம் வாழவேண்டும் வாழ்ந்துதானாக வேண்டும். வாழ வேண்டும் என்றால் ஆரோக்கியமாக வாழவேண்டும். ஆனந்தத்துடன் வாழ வேண்டும். வாழ் நாளை பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும்.

வாழவேண்டும் என்றதும் ஆகா! என்ன ஆசை எத்தனை ஆசைகள் மனதிற்கு. சரி  எந்தக் காரிய காரணங்களாக இருந்தாலும் ஓர் செயல் திட்டம் இருந்தால்தான் வாழ்வில் வெற்றி என்ற மகிழ்வு வரும். அப்படியே வாழ வேண்டும் என்றால் நம் வாழ்க்கைக்கு என்ன திட்டம் வைத்திருக்கின்றோம்? யார் எடுத்த கைப்பிள்ளைப்போல் எந்த வித கட்டுப்பாடும் திட்டமிட்ட செயல்களும் இல்லாமல் குழந்தைமுதல் இறுதி நாள் வரை செயல் படுகின்றோம்.

நினைத்ததைக் கிடைத்ததை அருந்துகிறோம். உணவை உட்கொள்கின்றோம். இதில் எங்கு ஆரோக்கியம் வருகின்றது. எப்படி ஆனந்தஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் சீர் கெட்டபின் அங்கும் இங்கும் அதற்காக அலைகின்றோம். ஆரோக்கியம் என்றதும் இரண்டு நினைவிற்கு வரவேண்டும் 1. உடல் ஆரோக்கியம், 2. உணவு ஆரோக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கிய உணவு அவசியமானது. இரண்டும் ஒன்றுடன் ஒன்றாய் சேர்ந்தது. எனவே பொதுவாக ஆரோக்கியம் என்றால் முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு ஆரோக்கியம்தான். அது சீரடைந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் வாய்ப்பு உள்ளது.

வாழ்நாளை முழுக்க முழுக்க அனுபவிக்க கடைசி நிமிடம்வரை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கிய உடல் வேண்டும். அதற்கென திட்டங்கள் இட்டு செயல்படவேண்டும். வாழ்வு வளம்பெற உடல், மனது ஆரோக்கியமாய் இருக்க சில நல்ல பழக்க வழக்கங்களை உணவு முறையில் நடைமுறைப் படுத்தி பழக வேண்டும். மனிதன் பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவன். பழக்கத்தினால் எதையும் சாதிக்க முடியும். அவனால் எதையும் விரைவாக பழகவும் முடியும்.

இனி நீ புகைபிடித்தால், மது அருந்தினால், லாகிரிப்பொருள்களை உபயோகித்தால் உன் வாழ்நாளை கணக்கிட்டுக்கொள் என ஒரு மருத்துவர் சொல்லியபிறகு பழக முயற்சிப்பதற்கு வருமுன் காப்பாய் உன் ஆரோக்கியத்தை நல் சீரிய திட்டங்களினால், செயல்பாடுகளினால்.

சரி என்ன செய்ய வேண்டும்? நீங்கள் மனிதர்கள் போலச் சாப்பிடாமல் விலங்குகள் போல் உணவு உண்பதே சிறப்பு. எப்படி என்றால் மனிதன் தன் ருசிக்காக மேலும் மேலும் என விரும்பி சாப்பிடுகின்றான். விலங்குகள் தன் பசிக்காக மட்டுமே சாப்பிடுகின்றன. பசி அடங்கியதும் அது உண்பதை நிறுத்திவிடும். இதுவே சிறந்த பழக்கம்.                                                                                                                                                                           

‘எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்’ என ஒரு பழமொழி உண்டு. இதை பல இடங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்தாலும் இதன் முதண்மை வயிற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்பதுதான். உடலின் உறுப்புக்களுக்கு தேவையான சத்துக்களை சக்கரைப் பொருளாக மாற்றி இரத்தத்தில் கலக்கச் செய்வது இரப்பை என்ற வயிறே ஆகும். இது தன் செயல் திறனை இழந்தால் சத்துக்கள் உடலில் கலப்பது குறையும். பல உறுப்புகளின் செயலாக்கம் குறைந்துவிடும். இரப்பையின் சக்தி குறைந்தால் அசீரணம் ஏற்படும். உணவை நாம் முன்பு அருந்திய அளவிற்கு சாப்பிடமுடியாது. நன்றாயுள்ளது என்றோ கிடைத்தது என்றோ எதையும் சாப்பிட சாப்பிட வீணான கோளாறுகள் ஏற்படும். அசீரணத்தால் வந்தி பேதி ஏற்படலாம். இன்னும் பல குறைகள் உண்டாகும். மேலும் ஒரு இயந்திரம் கூட ஓர் காலஅளவு தான் இயங்குகிறது. பின் அதன் திறன் குறைந்துவிடும். வாழ்நாள் பூராவும் இயங்க வேண்டிய இந்த இரப்பையை பேணிக் காக்க வேண்டியது முதல் திட்டமாக இருக்க வேண்டும். 

எனக்கு இருக்கும் பிரச்சனையில் இதற்கு எப்படி முக்கியம் கொடுப்பது என்று சரியான நேரத்தில் உண்பதில்லை, கிடைத்த எதையும் உண்பது, காலம் தாழ்த்தி உண்பது, மிக அதிகமாக உண்பது, உண்ணாமலே இருப்பது ஆகியவை தவறான கருத்தாகும். நீங்கள் எதற்காக உழைகின்றீர்கள்?. நீங்கள் உண்ண, உங்களை நம்பி உள்ளவர்களைப் பாதுகாக்க. அன்பனே, சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்டமுடியும் என கேள்விப் பட்டிருக்கின்றீர்களா. நீங்கள் நலமுடன் இருந்தால்தான் உங்களை நம்பிய உறவுகளுக்கு உங்கள் உதவி கிடைக்கும். நீங்கள் ஆரோக்கியம் கெட்டிருந்தால் உங்களுக்கு எப்படி உங்களை நம்பி உள்ளவர்களின் உதவி கிடைக்கும். நீங்களும் உங்களை நம்பியிருந்தவர்களும் மிகுந்த துயரத்திற்குள்ளாவீர். சற்றே நிதானத்துடன் ஒருமுறை சிந்தியுங்கள். தெளிவடையுங்கள்.

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் உடல் நலத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களின் நல்வாழ்வு நம் வாழ்வுடன் பின்னப்பட்டுள்ளது. அவைகள் நசிந்து விடாமல் பாதுகாப்பது அந்தந்த உடலின் உள்ளத்தின் கடமை.

உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் செய்ய வேண்டியது

சூரிய ஒளி- காலை சூரியஒளி படுமாறு சூர்ய வணக்கம் செய்யுங்கள். காற்று சூரிய ஒளியின் அனுக்கள் நம் உடம்பில் பல தேவையான இயற்கை மாற்றங்கள் செய்யும்.

நல்ல சுவாசம்- நல்ல சீரான மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் பிரணாயமம் செய்யுங்கள். குருஸ்ரீ பகோராயின் இனையதளம் இராஜயோகப் பகுதியில் பிரணாயாமம் முறைகள், மற்றும் ஆசனங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. படித்துப் பார்த்து சந்தேகங்களை மின்னஞ்சலில் தீர்த்துக் கொள்ளவும். அல்லது அலை/ தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும்.

நீர்சத்து- உணவு அருந்தியபின் நீர் அருந்தவும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீர் பருகுங்கள்.

உடல் பயிற்சி- முடிந்த அளவு உங்களுக்குத் தெரிந்த சாதரண பயிற்சிகளைச் செய்யுங்கள். அதிக நாட்டம் உள்ளவர்களாக இருந்தால் குருஸ்ரீ பகோராயின் இனையதளம் இராஜயோகப் பகுதியில் உள்ள இருக்கைகள் பகுதியை பயன் படுத்துங்கள். இனைய தளத்திலுள்ள ஆரோக்கியமுத்திரைப் பகுதியையில் உங்களுக்கு உரியவற்றை தேர்தெடுத்து செய்து பழகவும். சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்க.

ஆரோக்கிய உணவு- உணவு என்ற உடன் சிலருக்கு சுவை நினைவிற்கு வரும். சுவைக்காக உணவருந்தாதீர். தேவைக்காக அருந்துங்கள். “அற்றல் அளவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடுதுய்குமாறு” என்பதற்கேற்ப அளவறிந்து தேவைக்கேற்ப தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அப்போது நோயும் மருந்தும் தேவையில்லை. கீழே உள்ள அட்டவணையில் உள்ள கலோரி கணக்கில் ஒர் நாளைக்கு என்ன தேவை எவ்வளவு தேவை என்பதைக் கணக்கிட்டு தெரிந்தெடுத்து உட்கொள்ளப் பழகுங்கள். நாளடைவில் பழகிவிடும். சராசரியாக ஒரு குழைந்தைக்கு ஒருநாளைக்கு 2000 கலோரிகளும், இளைஞர்களுக்கு 3500 கலோரிகளும் முழுவளர்ச்சி அடைந்தவர்களுக்கு 3000 கலோரிகளும் தேவைப்படும்.

ஆழ்ந்த உறக்கம்- நல்ல ஆரோக்கிய உடல் உள்ளவர்களுக்கு, உழைப்பவர்களுக்கு நல்ல உறக்கம் இயற்கையாகவே கிடைக்கும். மற்றவர்கள் படுத்த உடன் உறங்க சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

சராசரியான எடை- ஒவ்வொருவரும் தங்கள் உயரத்திற்கு வயதிற்கு ஏற்ப இவ்வளவு எடை இருக்கவேண்டும் என கணக்கிட்டுள்ளார்கள். அந்த அட்டவனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டு உங்களின் எடையை நீங்கள் பராமரிக்க வேண்டும். உங்களின் குழைந்தகள் சராசரியாக நன்றக வளர்கிறார்களா என்பதை நீங்களே உயரத்தையும் எடையும் கொண்டு கணக்கிட்டு தெரிந்து கொண்டு தகுந்த ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்கலாம்.

நாம் எல்லோரும் நம் உடலுக்கு என முன்னெச்சரிக்கையாக எதுவும் செய்வதில்லை. உடலின் பாகங்கள் தாக்கப்பட்டு செயல் குறையும் போதுதான் அதப்பற்றி கவலைப்பட்டு கவனம் செலுத்துகின்றோம். சிலசமயம் அது காலம் தாழ்த்திய செயாலகிவிடுகின்றது. இந்த புனித உடல் உலக இன்பத்தை ஆரோக்கியமாக அனுபவிப்பதற்காக கிடைத்தது. அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் அந்த எண்ணங்கள்தான் நமக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தும். அதற்கு கட்டுப்படும்.அன்புடன் -குருஸ்ரீ பகோரா  

சராசரியான உயரம் (செ.மீ) மற்றும் எடை (கி.கி) ( சிறுவர்- சிறுமியர்)

வயது

உயரம் சிறுமியர்

உயரம் சிறுவர்

எடை சிறுமியர்

எடை சிறுவர்

பிறந்த போது

50

50

3.0

3.0

3மாதம்வரை

55

56

4.0

4.5

4 – 6 மாதம்

61

62.5

6.5

6.5

7 – 9 மாதம்

64.5

65

6.0

7.0

10 – 12 மாதம்

66.5

69.5

6.5

7.5

1 வருடம்

72.5

74.0

8.0

8.5

2 வருடம்

80

81.5

9.5

10.0

3 வருடம்

87

89

11

12

4 வருடம்

94.5

96

13

13.5

5 வருடம்

101.5

102

14.5

15

6 வருடம்

107.5

108.5

16

16.5

7 வருடம்

113

114

17.5

18

8 வருடம்

118

119.5

19.5

19.5

9 வருடம்

123

123.5

21.5

21.5

10 வருடம்

128.5

128.5

23.5

23.5

11 வருடம்

133.5

133.5

26.5

26

12 வருடம்

139.5

138.5

30

28.5

13 வருடம்

144

144.5

33.5

32

14 வருடம்

147.5

150

37

35.5

15 வருடம்

149.5

155.5

39

39.5

16 வருடம்

151

159.5

41

43

17 வருடம்

151.5

163

42.5

47.5

18 வருடம்

151.5

163.5

42.5

48

19 வருடம்

151.5

163.5

42.5

48

20 வருடம்

151.5

164

43.5

49

21 வருடம்

153

164

44

49.5

 

இந்திய ஆண்கள் , பெண்களின் சராசரியான உயரம் மற்றும் எடை 

உயரம்- செ.மீ

ஆண் எடை- கி.கி

பெண் எடை- கி.கி

152

-

50-54

154

-

51-55

157

56-60

53-56

159

57-61

54-58

162

59-63

56-60

165

61-65

58-61

167

62-67

59-64

170

64-68

61-65

172

66-71

62-67

175

68-73

64-69

177

69-74

66-70

180

71-76

67-72

182

73-78

69-74

185

75-81

-

187

77-84

-

 

கலோரி அட்டவனை

காலை உணவு

அளவு

கலோரி

பானங்கள்

அளவு

கலோரி

முட்டை வேகவைத்தது

1

80

கருப்பு டீ சக்கரை இல்லை

1 கப்

10

முட்டை வருத்தது

1

110

கருப்பு காபி சக்கரைஇல்லை

1 கப்

10

முட்டை ஆம்லெட்

1

120

டீ பால் சக்கரை

1 கப்

45

பிரட் வெண்ணெய்

1

90

காபி பால் சக்கரை

1 கப்

45

சப்பாத்தி

1

60

பால் சக்கரை இல்லை

1 கப்

60

பூரி

1

75

பால் சக்கரை

1 கப்

75

பரோட்டா

1

150

ஹார்லிக்ஸ் பால் சக்கரை

1 கப்

120

சப்ஜி

1 கப்

150

பழரசம்

1 கப்

120

இட்லி

1-50கி

85

கரிமிலம் கலந்த பானம்

200 மி

90

சாதா தோசை

1-75கி

120

பீர்

200 மி

200

மசாலா தோசை

1-150கி

250

சோடா

200 மி

10

சாம்பார்

1 கப்

150

ஆல்கஹால்

1பெக்

75

உப்புமா

1-100கி

130

பெப்ஸி/ மிரண்டா

200 மி

80

 

 

உணவு வகைகள்

அளவு

கலோரி

பலவகை

அளவு

கலோரி

சாதம் வேகவைத்தது

100 கி

100

ஜாம்

ஸ்பூன்

30

சாதம் வறுத்தது

100 கி

150

வெண்ணெய்

ஸ்பூன்

50

நன்

1

150

நெய்

ஸ்பூன்

50

பருப்பு

1 கப்

150

சக்கரை

ஸ்பூன்

30

தயிர்

1 கப்

100

பிஸ்கட்

1

30

காய்கறிகள்

1 கப்

150

வறுத்த கொட்டைகள்

1 கப்

300

மாமிசம்

100 கி

230

ஐஸ்கிரீம்

1 கப்

200

சலாட்

1 கப்

100

மில்க் ஷேக்

1 கப்

200

அப்பளம்

1

45

வேபர்

1 பாக்

120

கட்லட்

1

75

சமோஸா

65 கி

207

ஊறுகாய்

1

30

பேல்/பாணி பூரி

ப்ளேட்

150

சூப் காய்கறி

1 கப்

75

பாயாசம்

150 கி

330

சூப் மாமிசம்

1 கப்

150

பழங்கள்

1

75

மீன்

100 கி

70

மைசூர்பா

60 கி

400

கோழி

100 கி

100

அல்வா

100 கி

320

முட்டை

1

80

எண்ணெய்

10 கி

90

 

சத்துள்ள உணவு- ஒவ்வொன்றிலிருந்தும் ஏதாவது ஒன்றை தினமும் உபயோகிக்கவும்

பழவகைகள்

அண்ணாசி, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, தர்பூசணி, திராட்சை, பப்பாளி, மாம்பழம், மாதுளை, வாழை,

காய்கறிகள்

அவரை, இஞ்சி, உருளைக்கிழங்கு, எழுமிச்சை, கத்தரி, காரட்,, காலிப்ளவர், டர்னிப், தக்காளி, தேங்காய், பீட்ரூட் பீர்க்கன், புடலங்காய், பூசனி, முருங்கை, முட்டைகோஸ், வெங்காயம், வெண்டை, வெள்ளரி, வெள்ளைப்பூண்டு,

பருப்பு,தானியம்

உளுந்து, கடலை, கொட்டைகள், கொள்ளு, கோதுமை, சிகப்பு அரிசி, சுண்டல், தட்டபயிர், துவரை, பாசிப்பருப்பு, பட்டாணி, பீன்ஸ், மொச்சை,

மாமிசம்

கோழி, மீன் வெள்ளை மாமிசம்,

பால் பொருள்

தயிர், பாலடைக்கட்டி, வெண்ணெய் எடுக்கப்பட்ட பால்

பல வகை

உலர்ந்த கொட்டைகள், தாவர எண்ணெய்வகைகள், தேன்,

திரவ வகை

காய்கறி சூப், தண்ணீர், பழங்கள், பழரசங்கள், லஸி.

 

குறைந்த கொழுப்பு, நிறைய நார்சத்து உள்ள மாதிரி உணவு (இந்தியா) 

நேரம்

உணவுவகை

கொழுப்பு-கலோரி

நார்சத்து

மற்றவை

அதி காலை

1கப் டீ பால் சர்க்கரை

1

45

0

காலை உணவு

2சப்பாத்தி,

1கப் காய்கறிகள்,

1கப் பால்

0

0

1

120

100

60

6

8

0

மதிய உணவு

1 கப் வேகவைத்த அரிசி

1 கப் குழம்பு

1 கப் காய்கறிகள்

1 கப் சாலெட்

1 பழம்

0

0

0

0

0

120

150

100

100

75

6

10

8

8

8

மாலை

1 கப் டீ, பால் சர்க்கரை

1

45

0

இரவு

2 சப்பாத்தி

1 கப் பருப்பு

1 கப் மீன் மாமிசம்

1 கப் சாலெட்

1 கப் தயிர்

2 ஸ்பூன் எண்ணெய் சமையலுக்கு

0

0

10

0

8

10

120

150

100

100

100

90

6

10

0

8

0

0

மொத்தம்

30

1575

78

 

 $$$$$

 

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:42

மாகரா ஆசனம்

மாகரா ஆசனம்-முதலை நிலை- கடின தரம்-1

நற்பயன்கள்- இரத்த அழுத்தம், மன இறுக்கம் ஆகியவைகளினால் ஏற்படும் உபாதைகளை நீக்கும்.

 

1.விரிப்பின்மேல் வயிறு நிலத்தின்மேல் இருக்குமாறு குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் தலைக்குமேல் நீட்டியவாறு பூமியைப் பார்த்தவாறு இருக்கட்டும். கணுக்கால்கள் நிலத்தை தொட்டவாறு வைக்கவும்.

2.வலது கையை மடித்து இடது தோள்பட்டையிலும், இடது கையை மடித்து வலது தோள்பட்டையிலும் வைக்கவும். கழுத்து, கைகள் இரண்டும் ஒன்றை ஒன்று குறுக்கிட்ட இடத்திலும், தாடை அதற்கு முன்னும் இருக்கட்டும். கணுக்கால்கள் இடையே சிறிது அளவு இடைவெளியில் இருக்கட்டும்.

3.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இயற்கையாக சுவாசித்து இருக்கவும். அதன்பிறகு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:40

தனுராசனம்

தனுராசனம்-தராசு நிலை- கடின தரம்-5

 

நற்பயன்கள்- மலச்சிக்கல், வாயு கோளாருகளைக் வராமல் தடுக்கும். சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும். சுருங்கி விரியும் அடிவயிற்றினால் தசைகள் சீராகி ஜீரண சக்தி மேம்படும். அடி வயிறு, உடம்பு இளைக்க உதவும். கைகள், கால்கள், முதுகுத்தண்டு வளைவு தன்மை ஆகியவைகளுக்கு சிறந்தது. முதுகுவலி நீங்கும். வயிற்றின் மேல்பகுதி உடம்பு வலிவுறும்.

1.விரிப்பின்மேல் வயிறு நிலத்தின்மேல் இருக்குமாறு குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் ஆகாயம் பார்த்தவாறு இருக்கட்டும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு தலையை நேராகத் திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும், இடது முழங்காலை மடக்கி கணுக்காலை இடது கையாலும், வலது முழங்காலை மடக்கி கணுக்காலை வலது கையாலும் பிடிக்கவும்.

3.மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து, மெதுவாக கனுக்கால்களை இழுத்தவண்ணம் முழங்காலை நிலத்திலிருந்து தூக்கவும். அதேசமயம் நெஞ்சையும் உயர்த்துங்கள். தலையை கூடுமான வரை நிமிர்த்தி இருங்கள். உடம்பின் பளு முழுவதும் அடிவயிற்றில் இருக்கட்டும்.

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:40

நாகாசனம்

நாகாசனம்-நாக நிலை- கடின தரம்-4

 

நற்பயன்கள்- தொடர்ச்சியான பயிற்சி எல்லா நோய்களையும் குணப்படுத்தும். குண்டலினியை விழிப்பு நிலை ஏற்படுத்தும். முதுகுத்தண்டு, கீழ் முதுகு ஆகியவற்றை பலப்படுத்தும். மணிகட்டு, மார்பு தசைகளையும் வலிமையுடையதாக்கும். வயிறு மற்றும் ஆண், பெண் உறுப்புகளின் தசைகள் நரம்புகள் வலிமையடையும். தொடர்ந்து இந்த ஆசனம் பயின்றால் இடம் நகர்ந்த தண்டுவத்தின் தட்டுகள் பழைய நிலைக்கு வரும்.

1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு தலையை நேராகத் திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று இருக்குமாறு மார்புக்கு நேர்கீழ் வைக்கவும்.

3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, கைகளை அழுத்தியவாறு உடம்பை இடுப்புவரை மேலே உயர்த்தவும். கைகளை முழங்கை மடங்காமல் நேராக இருக்கும்படி கொண்டுவந்து முதுகை வளைக்கவும். தலைமேல் நோக்கி நிமிர்ந்து இருக்கட்டும். இதற்குமேல் வளையமுடியும் என்றால் கைகளை அப்படியே இடுப்பு பக்கம் நகர்த்தி முதுகை வளைந்து கொடுக்க வசதி செய்யவும்..

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:39

சலபாசனம்

சலபாசனம்-சலப நிலை- கடின தரம்-3

நற்பயன்கள்- ஆடுகால், கீழ் இடுப்பு சதைகளையும் வலிமையுடையதாக்கும். வயிற்றை சீர்படுத்தி வாயு உற்பத்தியினால் ஏற்படும் வாயுகோளாறுகளை சீர்படுத்தும். மூத்திரப்பையை வலிமையுடையதாக்கும். மூத்திரகோசத்தை, முதுகுத்தண்டை சீராக்கும். பெருவயிற்றைக் குறைக்கும். மலச்சிக்கலை நீக்கும்.

முதல்நிலை

 

1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.

2.தலையை நேராகத்திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் இடது கையை நீட்டி பாதம் தரையில் இருக்குமாறும் வலது கையை மடக்கி முதுகின் பின்னால் இருக்குமாறு வைக்கவும்.

3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை, மார்பு, தோள்பட்டை நீட்டிய இடது கை ஆகியவற்றை உயரத் தூக்கவும். தலையை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். வலது காலை ஒருஅடி உயரத்திற்கு தூக்கவும். இடது கால் பாதம், முழங்கால், தொடை ஆகியவை நிலத்தை அழுத்தியவாறு இருக்கட்டும்.

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

பின்னர் வலதுகை, இடது கால் மாற்றி செய்யவும்

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

இரண்டாம்நிலை

 

1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.

2.தலையை நேராகத்திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் இடது, வலது கைகளை நீட்டி பாதம் தரையில் இருக்குமாறும் வைக்கவும். கணுக்கால்கள் இரண்டும் சேர்ந்தவாறு இருக்கட்டும்.

3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை, மார்பு, தோள்பட்டை நீட்டிய இடது, வலது கைகள் ஆகியவற்றை உயரத் தூக்கவும். தலையை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். இடது, வலது கால்களை ஒருஅடி உயரத்திற்கு தூக்கவும். வயிற்றில் அழுத்தம் கொடுத்து சமநிலைப்படுத்தவும்.

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

மூன்றாம்நிலை

                          1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.

2.தலையை நேராகத்திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் இடது கையால், வலது மணிகட்டை முதுகின் பின்னால் பிடிக்கவும். கணுக்கால்கள் இரண்டும் சேர்ந்தவாறு இருக்கட்டும்.

3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை, மார்பு, தோள்பட்டை ஆகியவற்றை உயரத் தூக்கவும். தலையை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். இடது, வலது கால்களை ஒரு அடி உயரத்திற்கு தூக்கவும். வயிற்றில் அழுத்தம் கொடுத்து சமநிலைப்படுத்தவும்.

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

நான்காம்நிலை

 

1.வயிற்றை கீழே நிலத்தில் படுமாறு படுக்கவும். தலை ஒருபக்கம் திரும்பியிருந்தவாறும் கைகளின் பாதங்கள் மேலேபார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.

2.தலையை நேராகத்திருப்பி தாவாக்கட்டை நிலத்தை தொடுமாறும் கைகள் இரண்டும் தொடைக்கு அடியிலும் பாதங்களை தொடை அழுத்தியவாறு வைக்கவும்.

3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை, மார்பு, தோள்பட்டை இரண்டுடன் உயரத் தூக்கவும். தலையை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கவும். கால் பாதங்கள், முழங்கால், தொடை ஆகியவை நிலத்தை அழுத்தியவாறு இருக்கட்டும்.

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

 

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:37

புஜங்காசனம்

புஜங்காசனம்-தோள் நிலை- கடின தரம்-1

நற்பயன்கள்-தோள்பட்டை, கைகள், முழங்கை பலம்பெறும். மார்பு விரிந்து சுவாசம் சீராகும். இடுப்புவலி, மூட்டுவலி வருவதை தடுக்கும். முதுகெழும்பு, இடுப்பு பலம் பெறும். சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும். அடிவயிற்றில் கொழுப்பு ஏற்படுவதை குறைக்கும்.

முதல்நிலை

 

1.விரிப்பின்மேல் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் நிலம் பார்த்தவாறு இருக்கட்டும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை உயரத் தூக்கவும். கைப்பாதங்களில் அழுத்தம்கொடுத்து மார்பு, தோள்பட்டை இரண்டையும் உயர்த்தவும். முழங்கை 90டிகிரியில் இருக்க வேண்டும். பாதம் நிலத்தில் இருக்கட்டும்

3.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

இரண்டாம்நிலை

  

1.விரிப்பின்மேல் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் நிலம் பார்த்தவாறு இருக்கட்டும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, தலையை உயரத் தூக்கவும். வயிற்றில் அழுத்தம் கொடுத்து மார்பு, தோள்பட்டை இரண்டையும் உயர்த்தவும். கைகளை மடக்கி பாதங்கள் மார்பை ஒட்டியவாறு தூக்கி இருக்க வேண்டும்.

3.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

மூன்றாம்நிலை

  

1.விரிப்பின்மேல் குப்புற படுத்துக் கொள்ளவும். கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் நிலம் பார்த்தவாறு இருக்கட்டும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, கைபாதங்கள், வயிற்றில் அழுத்தம் கொடுத்து மார்பு, தோள்பட்டை இரண்டையும் உயர்த்தவும். தலையை இடது பக்கம் திருப்பி உயரத் தூக்கி தோள்பட்டை வழியாக வலது காலைப் பார்க்கவும்.

3.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, கைபாதங்கள், வயிற்றில் அழுத்தம் கொடுத்து மார்பு, தோள்பட்டை இரண்டையும் உயர்த்தவும். தலையை வலது பக்கம் திருப்பி உயரத் தூக்கி தோள்பட்டை வழியாக இடது காலைப் பார்க்கவும்.

5.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

 

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:37

உத்தான் பாதாசனம்

உத்தான் பாதாசனம்– கடின தரம்-2

நற்பயன்கள்- கனுக்கால், ஆடுசதை, முழங்கால், இடுப்பு வலிமை பெறும். இடுப்பு மூட்டில் உள்ள நரம்புகள் நன்றாக செயல்பட்டு இலகு தன்மையடையும்

முதல் நிலை-

 

1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.இடது காலைத்தூக்கி கடிகார சுற்றுப்பாதையில் முதலிலும், பின் அதற்கு எதிர் திசையிலும் சுற்றவும். முழங்காலை மடக்க கூடாது. வலது கால் நீட்டிய வாறு இருக்க வேண்டும்.

3.வலது காலைத்தூக்கி கடிகார சுற்றுப்பாதையில் முதலிலும், பின் அதற்கு எதிர் திசையிலும் சுற்றவும். முழங்காலை மடக்க கூடாது. வலது கால் நீட்டிய வாறு இருக்க வேண்டும். முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

இரண்டாம் நிலை

 

1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.இடது காலை ஒன்றரை அடி உயரத்திற்கு தூக்கி பின் பழைய நிலையில் வைக்கவும்.

3.வலது காலை ஒன்றரை அடி உயரத்திற்கு தூக்கி பின் பழைய நிலையில் வைக்கவும்.

4.இருகால்களின் கணுக்கால்களை ஒன்றுசேர்த்து வயிற்றில் அழுத்தம் கொடுத்து ஒன்றரை அடி உயரத்திற்கு தூக்கி சிறிது நேரம் நிறுத்தவும். பின் பழைய நிலையில் வைக்கவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

மூன்றாம் நிலை

 

1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.இடது, வலது கணுக்கால்களை சேர்த்து வைக்கவும். இருகாலையும் சேர்த்து ஒன்றரை அடி உயரத்திற்குத் தூக்கி கடிகார சுற்றுப்பாதையில் சுற்றவும். எவ்வளவு பெரிய வட்டம் போடமுடியுமோ அவ்வளவு பெரிய வட்டம் போடவும். முழங்கால்களை மடக்க கூடாது.

3.பின் அதற்கு எதிர் திசையிலும் சுற்றவும். எவ்வளவு பெரிய வட்டம் போடமுடியுமோ அவ்வளவு பெரிய வட்டம் போடவும். முழங்கால்களை மடக்க கூடாது.

4.பின் முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27098831
All
27098831
Your IP: 18.221.146.223
2024-04-27 22:04

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg